1 இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ,
உம் ஆசனம் முன் மண்டியிட்டோம்,
உள்ளத்தின் ஆழத்தின் புலம்பலிதே,
உலகெங்கும் உபத்ரவப்படுவோர்காய்.
2 விண்ணில் வீற்றிருக்கும் உம்மிடம்,
மின்னிடும் நட்சத்ர கூட்டத்தின் பின்,
இங்கும் நீர் தங்கிடும் இடமறிந்தோம்,
கதறிடும் மாந்தரின் அருகினிலே.
3 குணமளிக்கும் ஊற்றே இங்கும்,
மனதுருகிடும் தூதன் சிறகினின்று,
விரைவாய் வல்லமை யாய் வந்தே,
வேதனையால் துன்புறுவோர் மேல்.
4 வறுமையும் பசியும் நிறைந்த இடம்,
குழந்தைகள் சிறுவரும் ஓலமிட,
சேவைசெய்ய எம்மை அழைத்தீரோ?
உம்மையவர் எம்மில் காண.
Source: The Cyber Hymnal #15600